நேரம் நல்ல நேரம்

காலம் இயற்கை சொத்து

இந்த உலகில் நேற்று வரை வாழ்ந்த மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.
இந்த உலகில் இன்று வாழும் மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.

இதே போல், இந்த உலகில் இனி வர இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இயற்கை கொடுக்க இருக்கும் சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.

இந்த காலம், குறிப்பாக ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது ஒரு வழிப்பாதை.

வாழ்வில் தனி மனிதன் எந்த ஒரு காலக்கட்டத்திலும் நேரத்தை செலவு செய்து விட்டால், வாழ்நாளில் அந்த நேரத்தை எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற முடியாது.

இதை தெளிவாக உணர்ந்து கொண்டு ஒவ்வொரு இளைஞனும் நேரத்தை பல வேலைகளுக்கு செலவு செய்யும் முன் தெளிவாகத் திட்டமிட்டு, நேரத்தை சேமித்து, உடல் ஆரோக்கியத்தை காக்க மன ஆரோக்கியத்தை வளர்க்க அந்த நேரத்தை செலவு செய்ய வேண்டும்.


வெற்றி ... தோல்வி

தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி அவனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தின் அளவைப் பொறுத்து இல்லை. மாறாக, ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழும் காலத்தில் திட்டமிட்டு காலத்தை செலவிடும் முறையில்தான் உள்ளது.

காலத்தை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு இளைஞன் பயன்படுத்தினால் , மனித வாழ்வில் வெற்றி மற்றும் மேலும், பலப்பல மேன்மைகள் அடைவது நிச்சயம்.
அதே சமயம் ஒரு இளைஞன் காலத்தை தவறான முறையில் திட்டமிடாமல் பயன்படுத்தினால் , வாழ்வில் தோல்வி நிச்சயம்.


காலத்தே பயிர் செய்

இளைஞனே ! சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். மனித வாழ்க்கையே நம் கையில் என்பதைவிட காலத்தின் கையில் என்பது தெளிவாகப் புரியும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் பல அனுபவ மொழிகளை சொல்லி உள்ளார்கள். அவைகள்

காலத்தே பயிர் செய்
காலம் பொன் போன்றது
காலமும், கடல் அலையும், யாருக்காகவும் காத்து இருக்காது.


காலத்தின் அருமை

இன்றைய 114 கோடி இந்திய மக்களில் 57 கோடி பேர் இளைஞர்கள். இந்த 57 கோடி இளைஞர்களில் எத்தனை பேர் காலத்தின் அருமையை உணர்ந்து உள்ளனர் ?

பதில் விரல் விட்டு எண்ணி விடலாம். இதுதான் எதார்த்த உணமை

காலத்தின் அருமையை உணர்ந்தால், TV முன் உட்கார்ந்து பொழுது போக்கு என்ற போர்வையில் இன்றைய இளைஞர்கள் பல மணி நேரம் வீணடிக்க மாட்டார்கள்.


காலத்தின் மேன்மை

இன்றைய இளைஞர்களில் பலர் இளமை முறுக்கில் காலத்தின் அருமை புரியாமல், காலத்தின் மேன்மையை உணராமலும் இளமை காலத்தை வீணடிக்கிறார்கள்.
இளமை காலம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் காலம்.
இதை உணாராமல், இன்றைய இளைஞர்கள் பொழுது போக்குக்காக மாதம் ஒரு முறை மற்றும் இரு முறை பார்க்க வேண்டிய திரைப்படங்களை கணிசமான நேரம் செலவு செய்து பார்க்கின்றனர்.


நேரப் போராட்டம்

இந்திய சாதாரண இளைஞனுக்கு உடல் ஆரோக்கிய பயிற்சி செய்ய திறந்த மைதானம் மற்றும் ஜிம்முக்கு போக நேரம் இல்லை !

இந்திய சாதாரண இளைஞனுக்கு பேட்மிட்டன், டென்னிஸ், வாலிபால் போன்ற பல விளையாட்டுகளை விளையாட நேரம் இல்லை !!

இந்திய சாதாரண இளைஞனுக்கு பலப்பல நல்ல அறைவை தூண்டும் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!

இன்றைய இளைஞனுக்கு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நேரம் இல்லை ! மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!


நேரப் போராட்டம்

தினம், தினம் ஒரு பெட்டிக் கடைக்கு 50க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் வருகின்றன. ஆனால், இன்றைய இந்திய இளைஞனுக்கு இரு செய்தித்தாளை கூட முழுமையாக படிக்க நேரம் இல்லை.

அவ்வளவு ஏன்?

ஒரு செய்தித்தாளில் மேம்போக்காக சில தலைப்புகளைக் கூட படிக்க நேரம் இல்லை.

இந்திய இளைஞன் தினம், தினம் பல வேலைகளை திறம்பட செய்ய நேரத்தோடு போராடிக் கொண்டே இருக்கிறான். இந்த நேரப் போராட்டம் இளமைக் காலத்தில் ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 6 வயது முதல் 60 வயது வரை நேரப் போராட்டம்.


வாழ்க்கை அஸ்திவாரம்

ஒரு பல் மாடி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே, பின்னாளில் உயர இருக்கும் உயரத்தை கட்டிடத்திற்கு போடப்படும் அஸ்திவாரத்தைக் கொண்டே கண்க்கிட்டுவிடலாம்.

அதே போல், ஒரு மனிதன், வாழ்க்கையில் அடைய இருக்கும் வளர்ச்சி, அவனுடைய இளமைக் காலத்தில் அதிலும் குறிப்பாக முதல் 30 ஆண்டு கால வாழ்க்கையில் நேரத்தை எவ்வாறு முறையாக முறைப்படுத்திக் கொண்டு செயல்படுகிறான் என்பதில் தான் உள்ளது.


உண்மை....

"உண்மை என்பது எளிது,
எளிமையாக இருப்பதால் உண்மையை
மக்கள் மறந்துவிட்டார்கள்"
- சுவாமி விவேகானந்தர்.


தன்னடக்கம்,
தன் நம்பிக்கை,
தன் வழி......

"Truth is simple, because of simplicity
truth has been forgotten"
- Swami Vivekananda.

பிரபலமான வலைப்பதிவு இடுகைகள்

வளரிளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றங்கள்

வாழ்க்கைத் திறன் கல்வி

இளைய பாரதமே வா வா...

ஆரோக்கிய வாழ்க்கை

வாழ்வின் நோக்கம்.